வலைப் பதிவில் இடம் பெற்ற கருத்து மோதல் காரணமாக, மதிசுதாவின் கணக்கினை கக் பண்ண மேற் கொள்ளப்பட்ட முயற்சிகள், மதி சுதா மீதான தனி மனிதர் ஒருவரின் இழிவான பின்னூட்டங்கள் பற்றி நீங்கள் அனைவரும் அறிவீர்கள். இவர் ஆணா, பெண்ணா எனும் வாதம் ஒரு புறம் இருக்க, இந்த நபரைப் பற்றி சகோதரன் அஞ்சனன் கூறிய கருத்துக்கள் எனக்கு மிகுந்த சந்தேகத்தை வரவைத்தன. ஐபி மாற்றும் தொழில் நுட்பம் மூலம் அனாமிகா பின்னூட்டம் போடுகிறார், மின்னஞ்சல்களை கக் செய்கிறார் என்றதும் என் பதிவிற்கு வந்த அவரது பின்னூட்டங்களையும், அவர் எங்கிருந்தெல்லாம் வந்திருக்கிறார் எனும் விடயங்களையும் ஆராய்ந்து பார்த்தேன்.